Temple, Unit 1, Durbar Industrial Estate , 60 Durbar Avenue, Coventry, CV6 5LW Tel: 02477113598
கோவில் திருப்பணிக்கோ, நேர்த்திக்கடன் அல்லது கோயிலுக்கு வேண்டுத்தலோ நாம் விரும்பியவாறு செய்யமுடியவில்லை. அந்த ஆண்டவனின் அருள் அல்லது அனுமதி இருந்தால் மட்டுமே எதுவும் செய்ய முடியும்.
இத்தலத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் நினைத்த மாத்திரத்தில் வந்து நிற்ககூடிய தெய்வம். குடும்பத்திலோ அல்லது தொழிலிலோ இதர பிரச்சனை இருந்தாலும் அம்பாளிடம் மனம் உருகி வேண்டினால் உடன் நிவர்த்தியாகும் என்பது சத்தியம்.
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் தற்போது சொந்தமான இடத்தில் 100 கனம்
தரிக்கக்கூடியவசதியுடன் அமைந்துள்ளது.
இங்கிலாந்து நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கொவென்றி நகரத்தில்அருள்பாலித்துகொண்டிருக்கும் அருள்மிகு சிவ முத்துமாரியம்மன் ஆலய கட்டிட திருப்பணிகள்பெருமுயற்சியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 27/08/2020முதல் கும்பாபிஷேக பூர்வாங்க கிரியைகள் ஆரம்பிக்கபட்டு 30/08/2020அன்று அருள்மிகு சிவ முத்துமாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு நூதன ஆவர்தன பிரதிஷ்டா கும்பாபிஷேகம்நடைபெற அம்பிகையின் திருவருள் கைகூடியுள்ளது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து48நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெறும். மண்டலாபிஷேகம் உபயம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய காரியாலயத்தை தொடர்பு கொண்டு தங்களுடைய பெயர்களை பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றோம்.
நன்றி
இவ்வண்ணம்
அருள்மிகு சிவ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்
If you would like to volunteer for other duties at the temple, please send your name, contact number or email address and any message to 02477988508
or Email at info@muthumariamman.org.uk
வேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரமெல்லாம் விரும்பியே அளிக்கும் அருள்மாரியாக வழங்குகிறாள். வேதாந்த வள்ளியாம் வேப்பிலைகாரியான கொவென்றி நகர் முத்துமாரியம்மனிடம் என்ன வேண்டுதல் என்றாலும் அதை நிறைவேற்றி கொடுப்பதாக கூறுகிறார்கள்.
©2020 Muthumariamman.org.uk. | All Rights Reserved | Designed by Ethulir Ltd